$

Saturday, December 09, 2006

சென்னை காதல்


ஒரு வார விடுமுறை நாள் மோசமாக முடிய என்னென்ன காரணங்கள் இருக்க முடியும்.

1. காலநிலை நன்றாக அமையாமல் போகலாம்.
2. பக்கத்து போர்ஷனில் தொலைக்காட்சி சத்தம் உங்கள் ஆழ்ந்த தூக்கத்தை கலைக்கலாம்.
3. ஒரு நல்ல சினிமா பார்க்கலாமே என்று முடிவெடுத்து சென்று மிக மோசமான திரைப்படத்தை பார்க்க நேரலாம்.

இந்த மூன்று விஷயங்களுமே மிக சரியாக வாய்த்தது எனக்கு. அதிலும் மிகவும் அதிக பாதிப்பை அளித்தது மூன்றாவது விஷயம்தான்.
"சென்னை காதல்" என்ற நல்ல star cast உள்ள , நல்ல தயாரிப்பாளர் தயாரித்த, வெகு நாட்களுக்கு பிறகு விக்ரமன் படம் என்றெல்லாம் எண்ணி விமர்சனம் அறியாமலேயே
போனதற்கு மிக சிறந்த தண்டனை காத்திருந்தது.


Negative:


* ஆக்ஷன் படம் என்றால் கயிறு கட்டி கதாநாயகன் சண்டைக்கலைஞர்களுடன் சண்டை ோடுவதை jimmy zip ல் படம் பிடிப்பது மட்டும்தான் என்று யாரோ மிக தவறாக விக்ரமனுக்கு சொல்லியிருக்கிறார்கள். சகிக்கவில்லை.
* கதையே இல்லை. மோசமான திரைக்கதை. சற்றும் லாஜிக்கே இல்லாத காட்சிகள்
* ஆரம்பத்திலிருந்து இறுதி வரை எல்லா காட்சிகளையுமே யூகிக்க முடிவதாய் அமைத்திருப்பது.


Positive

(அப்படியெல்லம் ஒன்றுமே இல்லை. இருந்தாலும் ஆறுதலுக்காகவாவது....)
* ரோபோ சங்கர் என்ற (விஜய் டிவி - கலக்க போவது யாரு - வெற்றியாளர்) மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் மட்டுமே ஒரே ஒரு
சிறிய ஆறுதல்.
* சில பாடல்களில் இசையமைப்பாளர் - ஜோஷ்வா ஸ்ரீதர்.

இது கலைப்படமும் அல்ல, கொலைப்படமும் அல்ல, மசாலா படமும் அல்ல. இந்த விதம் என்று வகைப்படுத்த இயலாமலேயே போவதை வேண்டுமானால் சிறப்பம்சமாக சொல்லலாம்.
சென்ற வருடம் இதே போலவே பாசிலையும், இளையாராஜா பாடல்களையும் நம்பி "ஒரு நாள் ஒரு கனவு" திரைப்படத்திற்கு போன ஞாபகம் ஏனோ வந்தது. ஒரு நல்ல மாலைப்பொழுது வீணாய்ப்போனது.


Tuesday, September 05, 2006

வேட்டையாடு விளையாடு

நான் மிகவும் ரசித்தவைகள்

1.முதல் பாதி வேகம் - (அந்த முதல் சண்டைக்காட்சியினை தவிர) மிக லாவகமாக கையாளப்பட்ட காட்சிகள், சுவாரசியம் குறையாத கதையின் போக்கு.

2. கமாலினி - பாடலும் வசனங்களும் அந்த 10 நிமிட பிளாஷ்பேக்கும். - அழகிய கவிதை.

3. ஜோதிகாவின் கதாபாத்திரத்தை மிக சீரியசாக அறிமுகப்படுத்த அவரது மேசையில் "ஒரு மாலையும், இன்னொரு மாலையும்" புத்தகம், "house of sand and fog" பற்றிய பேச்சு, "நான் இப்போல்லாம் ரொம்ப அழுமூஞ்சி ஆகிட்டேன்" என்ற மிகச் சிறிய வசனம்.

4.R.D.ராஜசேகர் கேமரா இல்லையே என்ற லேசான ஏக்கம் எனக்கு படும் தொடங்கி சற்று நேரம் வரை இருக்கத்தான் செய்தது. (காக்க காக்க, கஜினி இரண்டிலுமே என் முதல் ஒட்டு RDR க்குதான்) . ஆனால் ரவிவர்மனின் ராஜாங்கத்தை பெரிய திரையில் பார்த்து பிரமித்து இரண்டாம் முறை காமிரா நுணுக்கங்களை காணவே செல்லவிருக்கிறேன்.

5.எங்கும் சுவாரசியம் குறையாத படத்தொகுப்பு - (ஆண்டனி) .

6. தாமரை - மிக அழகான உரைநடை கவிதைகளை பாடல்களில் புகுத்தியிருப்பதால். ("என் பதாகை தாங்கிய உன் முகம் என்றும் மறையாதே")

குறைபாடுகளாய் எனக்கு பட்டவை

1. என்னதான் 35+ வயதுள்ள போலீஸ் தொப்பையுடன் இருப்பார் என்ற "அடிப்படை" உண்மை உணர்ந்திருந்தாலும் கமலை அவ்வாறு பார்க்க மனது வரவேயில்லை. சண்டைக்காட்சிகளில் அவர் திணறுகிறாரா? இல்லை அவ்வாறாக அவை அமைக்கப்பட்டுள்ளனவா? என்று தெரியவில்லை. மேலும் "மாட்டுவடா", "யார்கிட்ட..?" என்பது போன்ற விஜய்-அஜித் ரக வசனங்கள் அவ்வளவாக சிறக்கவில்லை.

2. பாதிபடம் போன பிறகு இடைவேளைக்கு சற்று முன்பே அறிமுகமாகும் வில்லன்களின் அறிமுகம் கதையின் வேகத்தை திடீரென்று குறைக்கதான் செய்கிறது. மாறாக அந்த கதாபாத்திரங்களின் details சற்று விபரமாக விசாரணை காட்சிகளில் காட்டப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்க தோன்றுகிறது.

3. பாடல்கள் மிக அழ்காக compose செய்யப்பட்டிருந்தாலும் பின்னணி இசை அளவுக்கு அதிகமான இரைச்சலுடன் இருக்கிறது சில காட்சிகளில். (கஜினியிலும் இந்த குறை இருந்தது)

4. மிக வேகமாக காட்சிகள் சென்றிருக்க வேண்டிய இரண்டாவது பாதியில் பாடல்களின் இணைப்பு பெரும் பிசகாகிவிட்டது. இனிமையான "உயிரிலே.." பாடல் சுத்தமாக ரசிக்கமுடியாத situation ல் வருவதால் எரிச்சலே மிஞ்சுகிறது.

ஆயினும் ஒரு நல்ல crime thriller நெடுநாட்களுக்கு நல்ல முறையில் வந்திருப்பது எனக்கு மிக மகிழ்வே!

Saturday, August 19, 2006

ஆனந்த ராகம் - மீண்டும்


உமா ரமணன் , தீபன் சக்ரவர்த்தி குரலில் இளையராஜா இசையில் "ஆனந்த ராகம், கேட்கும் காலம்.." என்ற மிக இனிய பாடலை யாராலும் மறக்க முடியாத அந்த இனிய கீதத்தை மீண்டும் இளையராஜாவே ஹிந்தி திரைப்படம் ஒன்றிற்காக மறு இசை வடிவப்படுத்தியிருக்கிறார். வடிவம் மாறியிருந்தாலும் மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கிறது.மிக இனிய ஒரு மெலடி மீண்டும் உருமாற்றம் பெற்று மிக அழகாக இசைக்கப்பெற்றிருக்கிறது.

பாடல் : "சாரா யே ஆலம்.."
திரைப்படம் : "ஷிவா"
பாடியவர்கள் : ஷ்ரேயா கோஷல், ரூப் குமார் ரதோட்
இசை : இளையராஜா



பாடல் சுட்டி : http://www.bollymaza.com/movie_song_shiva.htm




இந்த படத்தின் மற்ற பாடல்களும் 80-90 களில் வெளிவந்த பிற பாடல்களை ஒற்றியே அமைக்கப்பெற்றுள்ளது.

Thursday, August 10, 2006

கடல் பார்த்தல் அல்லது கவலை பார்த்தல்

கவலைகளில் கரைந்து போகும் என்
இரவுகளுக்கு தெரியும்
எத்தனை ஈரமானது
ஒரு துயர் நிறைந்த நாளென்று!

ஒரு நீண்ட பகற்பொழுதின் நீட்சியில்
கடலினில் மூழ்கப்போகும்
கதிரவனோடு என் துயரங்களைப்
பகிர்ந்து கொள்ள செல்வேன்!

அலைகளின் கால்களில்
கட்டிய சலங்கை இன்னொரு
பாதத்தடங்களை மெல்ல
நினைவுறுத்தி செல்லும்!

கூழாங்கற்கள் எல்லாமே
சற்றும் சிவப்பு,களைப்பு படராத
பளபளப்பான கண்களை
இடையுறுத்தி செல்லும்!

குழந்தையை அலையிலிருந்து
மீட்டெடுக்க எத்தனிக்கும்
ஏதோ ஒரு தாயின் கரங்கள்
தவறாமல் நினைவுக்கு
கொண்டு வரும்
வேறொரு தருணத்தில்
பிரியங்களை வாரியிறைத்த
வளைக்கரங்களை

நீலக்கடலின் அலைகளினூடே
கரைந்து போகுமெனெவே
எடுத்து சென்ற
துயரங்கள் யாவும்
இரட்டிப்பாக்கி வீடு
திரும்புவேன்!

இருட்டறையும் வரவேற்கும்

இன்னொரு கறுப்பு இரவில்
என்னை கரைத்துக்கொள்ள.

Monday, August 07, 2006

மாரீசம் யாதோ...?

பாடல் வரிகள் : வாலி
இசை : A.R.ரஹ்மான்
பாடியவர்கள் : கரோலிசா ,முகமது அஸ்லாம்,கிருஷ்ணா
திரைப்படம் : சில்லென்று ஒரு காதல்





"சில்லென்று ஒரு காதல்" (வரிச்சலுகைக்கென பெயரின் முதல் வரியில் "ஜி", "சி" யானது போலும்!) இசை கேட்டபிறகு எனது செல்லிடப்பாடுவானில் அடிக்கடி ஒலிக்கும் பாடலாய் இருக்கிறது "மாரீசம் யாதோ.." முழுக்க ஆங்கிலம் கலக்காத நல்ல தமிழ் தமிழ் தோய்ந்த மேற்க்கத்திய இசை பாணியில் நெய்யப்பட்ட மிக நல்ல பாடல்.

மாரீசம் யாதோ , இந்த மாதோ
காதல் தீதோ, சூதோ, வாதோ
இணையாதோ, உடையாதோ


இந்த முதல் மூன்று வரிகள் முதல் மூன்று நிமிடங்களுக்கு நிறைய இசைகோர்வைகளுக்கு நடுவில் மூன்று தடவை தொடர்ந்து "கரோலிசா" வால் பாடப்படுகிறது. மிக வேகமாக சென்று கொண்டிருக்கும் நேரத்தில் சட்டென்று விழும் சன்னமான மெளனத்தில், மிக மெல்ல ஒலியில் கெளதம்,கெளதம்... என்று கரோலிசாவின் குரல் வந்து விழ தொடர்கிறது, முகமது அஸ்லாம் குரல்


யார் இது, உன் பூர்வம் எது
என்ன தீ இது
புகை மூடி நின்றது
என் யாக்கை உயிர்
வெளி நின்றதோ!
மின்னல் ஒராயிரம்
உயிர் கொண்டதோ!
தேஜோபயம்


மெல்லிய இசை கடந்து போக, தேஜோபயம், ஜென்மாந்திரம், சாகுந்தலா, ப்ரேமாஸ்திரம், என்ற வார்த்தைகள் ஆண் மற்றும் பெண் குரலில் ஒலிக்க மெல்ல ஓய்ந்து மெல்லிய தாள கதிக்கு வந்து நிறைவடைகிறது பாடல்.


மிக அழகான இந்த பாடலை திரையில் காண பெரும் ஆவலோடு காத்திருக்கிறேன்.

பின்குறிப்பு:


மிக நல்ல இசைவட்டில் மட்டும் கேட்கவும்.


சுட்டிகள்:

http://www.musicindiaonline.com/l/26/s/movie_name.8567/





Sunday, August 06, 2006

சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்

மொழி : தமிழ்
நடிப்பு : ரவி,த்ரிஷா,பிரபு,பாக்யராஜ்,கீதா,ரிச்சா,தேஜாஸ்ரீ,சந்தானம்,
மணிவண்ணன்,ஹனீபா,சச்சு,மல்லிகா,கலாபவன் மணி......(இன்னும் நிறைய பேர்)
இசை : தேவிஸ்ரீ பிரசாத்
இயக்கம் : M.ராஜா

ஜெயம்,M.குமரன் s/o மஹாலக்ஷ்மி திரைப்படங்களுக்கு பிறகு இயக்குனர் ராஜாவின் மூன்றாவது திரைப்படம்.தெலுகுவில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படத்தின் (Nuvvostanante Nenoddantana) மாற்று மொழி வடிவம். முதல் வாரமே தியேட்டரில் சென்று பார்க்கும் திரைப்படங்களுக்கென சில இலக்கணங்கள் வைத்திருக்கிறேன். அவற்றின் எந்த எல்லைக்குள்ளும் இந்த திரைப்படம் வரவில்லை எனினும் பெரிதும் ஏமாற்றவில்லை என்பது எனக்கு நல்ல செய்தியே.

கதை

பாசமான தங்கை பணக்கார NRI வாலிபனை காதலிக்க, பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலன், காதலியின் அண்ணனின் condition களை நிவர்த்தி செய்து காதலியை கைபிடிக்கும் கதை. கதை கொஞ்சம் பழசானாலும் condition மட்டும் புதுசு. UK return ரவி வயற்காட்டில் விவசாயம் செய்து அண்ணனைவிட அதிக கொள்முதல் செய்ய வேண்டும் என்பதுதான்.

கதாபாத்திரங்கள்

நாயகன் ரவி. நன்றாக நடித்திருக்கிறார் என்று சொல்ல ஆசையாகதான் இருக்கிறது.(அவருக்கு இனிமேல் make-up போடாமல் இருந்தால் நன்றாக இருக்குமோ? சில இடங்களில் அளவுக்கு அதிகமாக முகத்தில் பவுடர் பூச்சு தெரிகிறது.) ஆனால் நாயகி திரிஷாவை விட நன்றாகவே நடித்திருக்கிறார்.

சந்திரமுகிக்கு பிறகு பிரபுவிற்கு மீண்டும் குணசித்திர வேடம். அண்ணன் கதாபாத்திரத்தில் திறம்பட செய்திருக்கிறார். நிறைய இடங்களில் சிவாஜியின் மேனரிசம் தெரிகிறது.
ரவியின் பெற்றோராக வரும் கீதா-பாக்யராஜின் கதாபாத்திரங்கள் செய்வதற்கு நிறைய இருந்தபோதும் அவர்களை அளவோடு நிறுத்திவிட்டது ஏன் என்று தெரியவில்லை. அதுவும் கீதாவை இடைவேளைக்கு பிறகு காணவே காணோம்.

இவர்கள் தவிர மற்ற கதாபாத்திரங்கள் அனைத்திற்கும் அவ்வப்போது ஒரு 15 நொடி புகழ் கொடுத்து அவர்களை திரையின் ஒரமாய் சமர்த்தாய் நிறுத்தி வைத்திருக்கிறார் இயக்குனர்.
(கலாபவன் மணி போன்ற ஒரு நல்ல நடிகருக்கு அடியாள் வேடம் கொடுத்து அவரது திறமைக்கு அணை போட்டிருப்பது சற்றே வருத்தம் தரதக்க செய்திகளில் ஒன்று)

காட்சி ஓட்டம்

முதற்பாதி முழுவதுமே ஜனரஞ்சகமாக சில நல்ல "தரமான நகைச்சுவை" ( காட்சிகளோடுதான் நகர்கிறது. இரண்டாவது பாதிதான் சற்றே அதிகமான தெலுகு வாடையுடன் + 80-90 களில் வெளியான தாலி + அரிவாள் + சென்டிமென்ட் காட்சிகளை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளது.

படம் முழுதும் தொய்வில்லாமல் முழு உத்வேகத்துடன் இழைக்கப்பட்டுள்ளது தேவிஸ்ரீபிரசாதின் இசை. நல்ல தாளகதியில் அமைந்த பாடல்கள் , குறையில்லாத பின்னணி இசை என தனது ராஜாங்கத்தை நடத்தியிருக்கிறார். (கபிலனின் வரிகளில் "உன் பார்வையில்" பாடல் என்னுடைய ஆதர்சம்.)

Special Effects காட்சிகளை தேவைப்பட்ட இடங்களில் புகுத்த முயற்சி செய்திருக்கிறார். பெரும்பாலான இடங்களில் நன்றாக வந்திருக்கிறது.
லண்டன் என்று சொல்லி துபாயை காட்டுவது எல்லாம் அவர்களுக்கே நியாயமாக இருந்தால் சரி

சிறப்பம்சங்கள்

1. இசை
2. பிரபு
3. முதற்பாதி

குறைபாடுகள்

1. பின்பாதி
2. உபயோகப்படுத்தப்படாத ஏகப்பட்ட கதாபாத்திரங்கள்

சுட்டிகள்

நல்ல பொழுதுபோக்கு படம் மட்டுமே!

Wednesday, August 02, 2006

CRASH

மொழி : ஆங்கிலம்
வெளியான வருடம் : 2005
நடிகர்கள் : brenden fracer, sandra bullock,thandie newton,matt dillon,Don chedle மற்றும் பலர்.
இயக்கம் : Paul Haggis




CRASH என்ற பெயரைக் கேட்டதும் ஏதோ பெரிய விபத்தினை ஒட்டிய கதை என்றுதான் நினைக்க தோன்றியது. இந்த திரைப்படத்திலும் விபத்துகள் உண்டு. ஆரம்பத்திலும், இறுதியிலும் இரண்டு சிறிய விபத்துகள் படத்தினூடே ஒரு பெரிய விபத்து என காட்சிகள் இருந்தாலும் அவை எல்லாம் படத்தின் கதைக்கு உதவும் சம்பவங்களேயன்றி படத்தின் கருவை விளக்கும் அம்சங்களாக கையாளப்படவில்லை.

ஆரவாரமில்லாத, சற்றே சிக்கலான, நிறைய கதாபாத்திரங்களைக் கொண்ட ஆனால் மிக அழுத்தமான திரைக்கதையின் வாயிலாக படைத்திருக்கிறார் இயக்குனர் பீட்டர் ஹாகிஸ்.
முன், பின் தெரியாத 12 கதாபாத்திரங்கள். அவர்களின் தீவிர அடிப்படை சித்தாந்தங்கள், ஆசைகள்,கோபம், வெறுப்பு, சந்தோஷம் என 36 மணி நேரங்கள் அவர்களின் வாழ்வில் எவ்வளவு குழப்பங்கள் நிகழ்ந்து தெளிகின்றன என்பதை விளக்கும் திரைக்கதை.

திரையில் தோன்றும் கதாபாத்திரங்கள்:

-இரண்டு காவல்துறை துப்பறியும் அதிகாரிகள் cum காதலர்கள் - கிரஹாம் மற்றும் ரியா
-ஒரு மாவட்ட அட்டர்னியும் (DA) அவரது மனைவியும் - ரிக் மற்றும் ஜீன்
-இரண்டு கறுப்பின திருடர்கள் - பீட்டர் மற்றும் ஆன்டனி
-இரண்டு காவலாளிகள் - ரேயான் மற்றும் தாமஸ்
-ஒரு தொலைக்காட்சி நிறுவன இயக்குனரும் அவரது மனைவியும் - (ஆப்பிரிக்க-அமெரிக்க தம்பதி) - கேமரூன் மற்றும் கிரிஸ்டினி
-ஒரு பூட்டு சரிசெய்யும் கொரிய பிரதிநிதி மற்றும் அவரது குடும்பம்- டேனியல்
-ஒரு பெர்சிய கடை உரிமையாளர் அவரது குடும்பம் - பர்ஹத்

இவ்வளவு கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறார் என்று புரியவே 20 நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இவர்கள் அனைவருக்கும் தனி தனியாக கவலைகள், பயங்கள்,இலக்குகள் என அவரவரவர்க்கு இருக்கும் தனிப்பட்ட நிகழ்வுகள் போக இவர்கள் வெவ்வேறு சம்பவங்களின் வாயிலாக சந்திக்கும்போது நிகழும் குழப்பங்களும் தீர்வுகளும்தான் கதை.

ஒரு ஆரம்பம் , ஒரு முடிவு என்ற வழக்கமான அணுகுமுறையிலிருந்து விலகி அவர்களது தினசரி நடவடிக்கைகளைக் கொண்டேகாட்சிகள் விரிந்து செல்கின்றன.ஒவ்வொருவரின் குணாதிசயங்களும், செயல்பாடுகளும் சூழ்நிலை காரணங்களால் மாறுபடுவதை மிக மிக அருமையாக தேர்ந்த காட்சிகளின் வாயிலாக வெளிப்படுத்துகிறது திரைப்படம்.

கதை அல்லது சம்பவங்களின் கோர்வை:


>
கதை என்று சொல்லப்போனால் அது மிகவும் குழப்பமாகவே முடியும். ஏனெனில் வழக்கதுக்கு மாறாக இதனை நிறைய சம்பவங்களின் கோர்வையாகவே கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

* கிரஹாம் ஒரு துப்பறியும் அதிகாரி. குற்றவாளியாக திரியும் தனது இளைய சகோதரனால் போதைக்கு அடிமையாகிவிட்ட தனது அம்மாவை தேற்ற முடியாமல் தவிக்கும் ஒரு கதாபாத்திரம். தான் எவ்வளவுதான் அக்கறை எடுத்துக்கொண்டாலும் தனது இளைய மக்னையே எண்ணிக்கொண்டிருக்கும் அவரது தாயை எண்ணி பெரிதும் வருந்துகிறார். கிரஹாமின் உடனுறை அதிகாரி மற்றும் காதலியாய் ரியா.

* பீட்டர் மற்றும் ஆன்டனி என்கிற இரண்டு கறுப்பின திருடர்கள். கருப்பர்கள் அனைவரும் கொள்ளைக்காரர்கள் போல வெள்ளையர்களால் நடத்தப்படுகிறார்கள் என்று குறைப்பட்டுக்கொண்டு தினமும் கார் திருடும் நவீன கொள்ளைக்காரர்கள். அறிமுகக் காட்சியில் அந்த மாவட்ட அட்டர்னியும் (DA) அவரது மனைவியும் செல்லும் காரை கொள்ளையடிக்கின்றனர்.

* பீட்டரின் திருட்டு வாதங்களை விரும்பாமலும் வெறுக்காமலும், அவனின் நட்பை உதறமுடியாமலும் அவனுடன் இணைந்து செயல்படுகிறான் ஆன்டனி. ஒரு முறை கார் திருடி செல்லும்போது போலிஸின் துரத்தலில் இருவரும் தனி தனியே செல்ல நேர்கிறது. சென்ற இடத்தில் பீட்டர் ஞானோதயம் பெறுகிறான். ஆன்டனி கொல்லப்படுகிறான்.

* கார் திருடு போன அதே நாளில் அவர்களது வீட்டின் பாதுகாப்பிற்கென கதவுகளின் சாவிகளை மாற்ற சொல்லி மாவட்ட அட்டர்னியான தனது கணவனுடன் சண்டை போடுகிறாள் ஜீன். அந்த வீட்டிற்கு பூட்டு பழுது பார்ப்பவனாக வருகிறான் டேனியல் என்னும் கொரிய நாட்டவன். ஜீன் பேச்சில் தென்படும் கருப்பர்களுக்கு எதிரான வாதங்களை சகித்துக்கொண்டு தனது வேலையை முடித்து விட்டு செல்கிறான்.

* பிறிதொரு நேரத்தில் ஒரு பெர்சிய கடையின் பூட்டுக்களை சரி செய்வது தொடர்பாக அந்த கடை முதலாளி பர்ஹத் உடன் சண்டை போட்டு திரும்புகிறான். அடுத்த நாளில் பர்ஹத்தின் கடை கொள்ளை போகிறது. அதற்கு காரணம் டேனியலே என்று எண்ணி அவனை கொல்வதற்காக துப்பாக்கியுடன் அவனது வீட்டிற்கு செல்கிறான். அங்கே அவனே அறியா வண்ணம் அவனது துப்பாக்கியின் குண்டு டேனியல் மகளின் மீது பாய அதிர்ச்சியில் உறைந்து போகிறான். அதிர்ஷ்டவசமாக அந்த பெண் பிழைத்துவிட நிம்மதி பெருமூச்சு விடுகிறான்.

* மாவட்ட அட்டர்னியின் மனைவியாக வரும் ஜீனுக்கும் கறுப்பர்கள்பால் லேசான வெறுப்பு தொனிக்க தனது நடவடிக்கைகளை வைத்திருக்கிறாள். தனது வீட்டு உதவியாளராக இருக்கும் பெண்ணீனை அவர் கறுப்பினம் சார்ந்தவர் என்ப்தாலேயே அவர் பால் வெறுப்பை உமிழ்கிறாள். ஆனால் கணவரின் பால் கொண்ட கறுத்து வேறுபாடுகள் முற்றிப்போன ஒரு நாளில் மாடிப்படியில் தவறி விழ நேரில துணையின்றி தவித்த நேரத்தில் வீட்டு உதவியாளினி கைகொடுக்க தனது கறுப்பின வேறுபாடுகளை மறக்கிறாள்.

* கேமரூன் மற்றும் கிரிஸ்டினி ஆகிய் இருவரும் ஒரு மகிழ்வான மாலை வேளையில் காரில் போய்க்கொண்டிருக்கும்போது ரேயான் மற்றும் தாமஸ் ஆகிய இரு காவல்துறை அதிகாரிகளலால் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். தனது தந்தைக்கு மருத்துவ உதவிகளை திறம்பட வழங்கவில்லை என்ற கோபத்தில் ஒரு மருத்துவமனையின் கறுப்பின சிப்பந்தியை தொலைபேசியில் கடிந்து கொண்டு வருகிறான் ரேயான். அவனுடைய சொந்த வெறுப்பு இந்த கறுப்பின தம்பதிகளின் மீதும் பாய தேவையின்றி அவர்களை காரிலிருந்து இறக்கி கிரிஸ்டினியின்பால் சோதனை என்னும் பெயரில் தவறான உடற்சார் அத்துமீறலை மேற்கொள்கிறான். அவனை எதிர்க்க திராணியின்றி கேமரூன் புழுங்குகிறான். இந்த செய்கையை சற்றும் விரும்பாத தாமஸ் தனது ஒத்துழையாமையை வெளிப்படுத்துகிறான்.
இந்த சம்பவத்திற்கு பிறகு கேமரூன்-கிரிஸ்டினி இடையே இடைவெளி அரும்புகிறது. வீட்டிற்கு போக விருப்பமின்றி கண்போன போக்கில் வாகனத்தை செலுத்துகிறான். பிறகு வழியில் போலீஸிடமிருந்து தப்பித்து வரும் பீட்டருக்கு புகலிடம் கொடுத்து அவனை தப்பிக்க வைக்கிறான். போகிற போக்கில் யாரோ சில கறுப்பர்கள் செய்யும் தவறுக்கு மற்றவர்கள் படும் அவதியினைப்பற்றி பேச பீட்டர் மனம் மாறுகிறான்.

* மற்றொரு காவல் துறை அதிகாரியான தாமஸ் ரேயானிடமிருந்து தனது பொறுப்பை விடுவித்துக்கொண்டு தனியே சென்றுவிடுகிறான். வழியில் பீட்டரை பிரிந்து தனியே வரும் ஆன்டனிக்கு தனது காரில் lift கொடுக்கிறான். சற்று நேரம் பேசிக்கொண்டிருக்கும்போதெ அவ்னது செய்கைகளில் சந்தேகம் கொண்டு அவ்னை கொன்றுவிடுகிறான். இறந்த பிறகே அவன் குற்றமற்றவன் என்பதை அறிகிறான். மனசாட்சி உறுத்த ஆன் டனியை சாலை ஓரத்திலேயே கிடத்தி விட்டு கடந்து போகிறான்.

* அதே நேரத்தில் மற்றொரு சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் வேளையில் கிரிஸ்டினியை தனது உயிரினையும் பொருட்படுத்தாது காப்பாற்றுகிறான் ரேயான்.




சிறப்பம்சங்கள்:

* இத்தனை கதாபாத்திரங்கள் இருந்தாலும் தொய்வடையாத திரைக்கதை, நேர்த்தியான காட்சி அமைப்பு, கதாபாத்திரங்களை இணைக்கும் லாவகம்

* சிறப்பான ஒளிப்பதிவு. லேசான பச்சையை (corporate color போலும்!) திரைப்படம் முழுமைக்கும் தூவிவைத்திருக்கின் றனர்.

எதிர்மறை(யாய் நான் கருதுவது)

* சாதாரண சினிமாவாய் இல்லாது ஒரு intellectual லாய் தோற்றம் கொண்டிருப்பது

விருதுகள்:

2005 - ஆஸ்கர்.

சிறந்த திரைப்படம் (பால் ஹேகிஸ் & பாபி)
சிறந்த திரைக்கதை (பால் ஹேகிஸ் & கேதி ஷூமேன்)
சிறந்த எடிட்டிங் (ஹியூக்ஸ் வின்போன்)

சுட்டிகள்:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ??????????.??????????...??????-??---    
????????????????????????, ????????????????????????????????

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal